Tuesday, April 27, 2010

உன் அழகே....



உன் அழகே...
என்
பேனாவின் முத்தமழையில்
கவி மொட்டுக்கள்
புஷ்பித்துக் கொள்கிறது
ஆனாலும்
அவை ஒவ்வொன்றும்
உன் மலர் முகத்தின்
தரிசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது....
உன் பாதங்கள்
பவனி வரும்
பாதையோரங்களில்
நந்தவனப் பனித்துளிகள்
தவம் செய்து
ஏமாந்து போவதொன்றும்
விந்தையல்ல ஆனால்
என்
வார்த்தைகளில் சிக்கிடாத
உன் அழகே
விந்தையிலும் விந்தையடி..
>>>>>>>MufeeSahida>>>>>>>>>

No comments: