Friday, April 30, 2010

காத்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்..


அன்பே....

உன் நினைவுகள்
எனக்குள் உள்ளவரை..
உலகம் இருளாகவும்

என்னை நான் அறியாமல்
உன்னை நினைத்து கொண்டு..!

கண்ணை மூடினால்....
உன் கனவு

கண்ணாடி முன் நின்றால்....

உன் நினைவு

நிஜமாக...என் முன்னாடி எப்போது
வந்து நிற்பாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

மறணத்தின் முன்னாடியாவது

வருவாய் என....


>>>>>>>>>>>>>>>>M & S >>>>>>>>>>>>>>>

Wednesday, April 28, 2010

ஒரு நட்பு பிரிகிறது..


உன் ஞாபகங்கள்
எனக்குள்
உறைகின்றபோது
தவிப்புகள் - இதயத்தின்
தழும்புகளை உரசி
இனம்புரியாத இன்ப
வலிகளுக்குள்
எனை
சிறைப்பிடித்துக் கொள்கிறது...

எங்கோ ஓர் மூலையில்
தினமும் எனக்குள்
ரீங்காரமிடும் உன்
மௌன கீதங்களை
சுவாசித்துக் கொள்கின்றேன்...

தென்னங்கீற்றின்
சலசலப்பையும் - இளம்
தென்றலின் மென்மையினையும்
ரசிப்பதை நான்
மறந்து விட்டேன், ஏன்?
இவை இரண்டும்
உன்னிடம் இணைந்திருப்பதனால்...


பிரயமே!..
பாதியில் வந்து
ரயில் ஸ்னேகமாய் - நம்
நட்பு பிரிவதை எண்ணி
கலங்குதடி மனது...

இதயம் விம்மிக் கொள்கிறது..
விழிகள் இரண்டும்
கடல் நீரை
கடன் வாங்கிக் கொள்கிறது...

எனக்குள் கலந்தவளே
எனை நீ....
நினைக்க மறந்தாலும்
உனை மறக்க நினைக்காதடி
இவன் மனது...

உன்னிடம்
கடைசியாய்
ஒன்று கேட்கின்றேன்
இடையினில் வந்த
நம் நட்பை
இடையினில் நிறுத்திவிடாதே!....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்புடன்
முபிஸ்

Tuesday, April 27, 2010

நீ...ஏன் அழுகின்றாய் வெண்ணிலாவே



அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?...
கள்ளமில்லா உன் முகத்தில்
கண்ணீர் ஏன் கொட்டுகின்றது?..
வெள்ளை போன்ற உன் முகத்தில்
வீழ்ந்து கொட்டும் கண்ணீர் துளிகள்
விடாமல் கொட்டுகின்றதே ஏன்?...
ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உனக்கோர் சோக கதையுண்டோ?
துளி துளியாய் சிந்தும் கண்ணீரில்
நான் என்னுள் துவண்டு போகின்றேன்
உன் துயர்துடைத்து துயரம் நீக்க
என் உள்ளமும் துடிதுடிக்கின்றது
உன் சோகத்தோடு நானும் உன்னோடு
சோடி சேர்ந்து வரப்போகிறேன்

வானத்தில் மேகத்தோடு மேகமாய்
நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம்
அங்கிருந்து நம்சோக கண்ணீரை
மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய்
இந்த பூமியை நனைத்திடுவோம்
வா பெண்ணே வா….

அழகிய வெண்ணிலவே நீ ஏன் அழுகின்றாய்?
காதல் கொண்டாயா ?
இல்லையாரிடமாவது களங்கப்பட்டாயா?
சொல் பெண்ணே சொல்..
உன்சோகத்தில் எனக்கும் கொஞ்சம் தருவாயா??..
இல்லா விட்டால் நான் விடை பெறுகிறேன்...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நண்பனைப் பற்றி சில வரிகள்......

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்….

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
நன்றி..


உங்கள் நண்பன் முபிஸ்

உன் அழகே....



உன் அழகே...
என்
பேனாவின் முத்தமழையில்
கவி மொட்டுக்கள்
புஷ்பித்துக் கொள்கிறது
ஆனாலும்
அவை ஒவ்வொன்றும்
உன் மலர் முகத்தின்
தரிசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது....
உன் பாதங்கள்
பவனி வரும்
பாதையோரங்களில்
நந்தவனப் பனித்துளிகள்
தவம் செய்து
ஏமாந்து போவதொன்றும்
விந்தையல்ல ஆனால்
என்
வார்த்தைகளில் சிக்கிடாத
உன் அழகே
விந்தையிலும் விந்தையடி..
>>>>>>>MufeeSahida>>>>>>>>>

உன் நினைவுடன் - உனக்காக

Photo Frames by Wishafriend

உன்னுடன்....
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்...
வசைபாடி இழுத்து செல்லும்
வார்த்தையில்லை
வேதனைகளுடன்
வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
நீ....என் அருகில் இல்லை
வருந்துகின்றேன்
வடிக்கின்றேன்
வடிந்தோடும் கண்ணீருடன்....
வாழ்வில் உமக்கு
வருடிக்கொடுக்க
என்
வஞ்சகமில்லா இரு கரங்களும்
வருகின்றது வாழ்நாளில் என்றும்
உனக்காக...
>>>>>>Mufees & Sahida<<<<<<<<

Monday, April 26, 2010

ஒரு கவிஞனின் தோல்வி




வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன் காதலித்த போது....
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்து கொண்டது
வாசங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது...
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது...

ஆனால் இன்று...
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது

காதலின் சாக்கடைக்குள்
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது..
பேனாவை காகிதம்
அனைத்து கொள்கிறது...
>>>>>>>>>M & S <<<<<<<<

என்னவளே...இது உனக்காக


மேகத்தின்
வெண்பட்டாடைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
உன் அழகை சொல்லி வர்ணிக்கின்றது...


உன் அழகை கவிகளால் எழுதுவதற்கு
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவுகள் வந்துவார்த்தைகளைக்
கலைத்துச் செல்கின்றன...
கற்பனைகள் வந்து
என் கவிதையை எடுத்துச் செல்கின்றன..
உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் போதாதுடி......
என்னவளே...


இது உனக்காக - Mufees&Sahida