
மேகத்தின்
வெண்பட்டாடைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்
உன் அழகை சொல்லி வர்ணிக்கின்றது...
உன் அழகை கவிகளால் எழுதுவதற்கு
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவுகள் வந்துவார்த்தைகளைக்
கலைத்துச் செல்கின்றன...
கற்பனைகள் வந்து
என் கவிதையை எடுத்துச் செல்கின்றன..
உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் போதாதுடி......
என்னவளே...
இது உனக்காக - Mufees&Sahida
No comments:
Post a Comment